×

வித்தியாசமாக முடி வெட்டியதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை!

 

மதுரை அருகே வித்தியாசமாக முடி வெட்டியதை பெற்றோர் கண்டித்ததால் 7ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள இடையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி அமுதா. இவர்களது மகன் ரோகித்(11). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ரோகித், புருவத்தில் கோடு போட்டு, முடி வெட்டியுள்ளார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட ரோகித், நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,  ரோகித் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் ஒத்தக்கடை போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.