×

கொரோனாவால் இறந்தவரின் சடலம் மாறியதாக புகார்… தஞ்சையில் பரபரப்பு!

தஞ்சை தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை மாற்றி வழங்கியதாக, உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பட்டுக்கோட்டை அடுத்த கீழப்பாளையம் பகுதியை சேரந்த 46 வயது ஆண் ஒருவர், கொரோனா பாதிப்பு காரணமாக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உடல் சவக்கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு கொரோனா வழிகாட்டுதல் படி பிளாஸ்டிக் உறையால் மூடப்பட்டது. இதனை அடுத்து, மருத்துவமனை ஊழியர்கள், அவரது உறவினர்களிடம் உடலை
 

தஞ்சை

தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை மாற்றி வழங்கியதாக, உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பட்டுக்கோட்டை அடுத்த கீழப்பாளையம் பகுதியை சேரந்த 46 வயது ஆண் ஒருவர், கொரோனா பாதிப்பு காரணமாக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உடல் சவக்கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு கொரோனா வழிகாட்டுதல் படி பிளாஸ்டிக் உறையால் மூடப்பட்டது.

இதனை அடுத்து, மருத்துவமனை ஊழியர்கள், அவரது உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். கிராமத்திற்கு எடுத்துச் சென்றபோது இறந்தவருக்கு 55 வயது இருப்பதும், அது வேறு நபரின் சடலமாக இருக்க கூடும் என சந்தேகம் எழுந்தது. இறந்த நபரின் மகனும், அது தனது தந்தையின் உடல் இல்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து, அவர்கள் நேற்றிரவு உடலை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.