உ.பி. பாலியல் வன்கொடுமை சம்பவம்- தஞ்சையில் தி.க. ஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூர் உத்தரபிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தஞ்சையில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திராவிட கழக மகளிரணி மாவட்ட தலைவி கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், உ.பி. அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டன. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத உ.பி. அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
Oct 5, 2020, 12:47 IST
தஞ்சாவூர்
உத்தரபிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தஞ்சையில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திராவிட கழக மகளிரணி மாவட்ட தலைவி கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், உ.பி. அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டன.
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத உ.பி. அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.