×

தஞ்சை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது, தாக்குதல்… பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியீடு…

தஞ்சை தஞ்சை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது, நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர்கள் மாரிமுத்து மற்றும் ராகவன். நண்பர்களான இருவரும் வேற்றிரவு விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், இருவரையும் நண்பர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது, பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் அருண் பாண்டியனுக்கும், காயமடைந்தர்களின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், மதுபோதையில் இருந்து
 

தஞ்சை

தஞ்சை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது, நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர்கள் மாரிமுத்து மற்றும் ராகவன். நண்பர்களான இருவரும் வேற்றிரவு விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், இருவரையும் நண்பர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது, பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் அருண் பாண்டியனுக்கும், காயமடைந்தர்களின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், மதுபோதையில் இருந்து அவர்கள் பயிற்சி மருத்துவர் அருண் பாண்டியனை கைகளாலும், நாற்காளிகளை தூக்கி வீசியும் தாக்கினர். மேலும், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். இந்த நிலயில் தாக்கதல் சம்பவத்தை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து, அங்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இந்த சம்பவம் குறித்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி போலீசார், வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவு அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.