×

அதிராம்பட்டினத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிராம்பட்டினத்தை அடுத்த மேலபழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் 60 வயது மூதாட்டி இந்திராணி. 10 ஆண்டுகளுக்கு முன் கணவர் உயிரிழந்த நிலையில், இவருக்கு கார்த்தி என்ற மகனும், சரிதா என்ற மகளும் உள்ளனர். கார்த்தி வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில், அவரது மகள் சரிதா திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த இந்திராணியை,
 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிராம்பட்டினத்தை அடுத்த மேலபழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் 60 வயது மூதாட்டி இந்திராணி. 10 ஆண்டுகளுக்கு முன் கணவர் உயிரிழந்த நிலையில்,

இவருக்கு கார்த்தி என்ற மகனும், சரிதா என்ற மகளும் உள்ளனர். கார்த்தி வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில், அவரது மகள் சரிதா திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த இந்திராணியை, வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் கழுத்து

மற்றும் கை பகுதியில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றனர். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார். நகைக்காக இந்திராணி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.