கும்பகோணம் அருகே நண்பர்கள் வெட்டிக்கொலை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோயில் கிளாரட் நகரை சேர்ந்தவர் காமராஜ் ( 40 ). இவர் வழக்கறிஞராக இருந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் ( 40 ). கொத்தனார் வேலை செய்து வந்தார். காமராஜும் சக்திவேலும் நண்பர்கள். நண்பர்கள் இருவரையும் நேற்று இரவு 9 மணியளவில் மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் நாச்சியார்கோயில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது
Oct 20, 2020, 19:47 IST
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோயில் கிளாரட் நகரை சேர்ந்தவர் காமராஜ் ( 40 ). இவர் வழக்கறிஞராக இருந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் ( 40 ). கொத்தனார் வேலை செய்து வந்தார். காமராஜும் சக்திவேலும் நண்பர்கள்.
நண்பர்கள் இருவரையும் நேற்று இரவு 9 மணியளவில் மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்ததும் நாச்சியார்கோயில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பர்கள் இருவரும் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தினால் நாச்சியார் கோவில் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.