×

தலைமை காவலர் வீட்டில் 15 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் கொள்ளை!

தஞ்சாவூர் தஞ்சையில் தலைமை காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை பூக்கார முதல் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் சென்னையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சத்தியமூர்த்தி தஞ்சை ஞானம் நகரில் கட்டிய புதிய வீட்டிற்கு கடந்த 24 ஆம் தேதி கிரகப்பிரவேசம் நடந்துள்ளது. இதனால், தனது பூர்வீக
 

தஞ்சாவூர்

தஞ்சையில் தலைமை காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை பூக்கார முதல் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் சென்னையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சத்தியமூர்த்தி தஞ்சை ஞானம் நகரில் கட்டிய புதிய வீட்டிற்கு கடந்த 24 ஆம் தேதி கிரகப்பிரவேசம் நடந்துள்ளது. இதனால், தனது பூர்வீக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புதிய வீட்டில் சென்று தங்கியிருந்தார்.

நிகழ்ச்சி நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று காலை பூக்கார முதல் தெருவில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவை உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சத்தியமூர்த்தி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து, அவர், தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து போலீசார் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.