×

தென்காசி அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

தென்காசி தென்காசி அருகே வீட்டில் மின் மோட்டாரை ஆன்செய்த போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன். விவசாயி. இவரது மனைவி வெள்ளத்தாயி (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்காக, வெள்ளத்தாயி மின் மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த
 

தென்காசி

தென்காசி அருகே வீட்டில் மின் மோட்டாரை ஆன்செய்த போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன். விவசாயி. இவரது மனைவி வெள்ளத்தாயி (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்காக, வெள்ளத்தாயி மின் மோட்டாரை ஆன் செய்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வெள்ளத்தாயியை உறவினர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்த இலத்தூர் போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.