×

மதுப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தற்கொலை!

தென்காசி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் மதுப்பழக்கத்தை தாயார் கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மகன் முருகன் (35). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பத்ரகாளி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், முருகன் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாத அவர், மதுபோதையில் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனை அவரது
 

தென்காசி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் மதுப்பழக்கத்தை தாயார் கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மகன் முருகன் (35). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பத்ரகாளி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், முருகன் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாத அவர், மதுபோதையில் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனை அவரது தாயார் ஆறுமுகம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மது அருந்துவதை தாயார் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வாசுதேவநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.