×

கடையநல்லூர் அருகே சரக்கு ரயில் மோதி, மூதாட்டி பலி!

தென்காசி கடையநல்லுர் அருகே சரக்கு ரயில் மோதி 80 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த மாவடிக்கால் ரயில்வே பீடர் ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மனைவி முனி ஆச்சு(80). இவர் அந்த பகுதியில் ரயில்வே தண்டாவளத்தின் அருகே உள்ள புளியமரத்தில் விழும் புளியம் பழங்களை எடுப்பது வழக்கம். இதன்படி நேற்று காலை, முனிஆச்சு புளியம்பழம் சேகரிக்க ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக செங்கோட்டையில் இருந்து மதுரை
 

தென்காசி

கடையநல்லுர் அருகே சரக்கு ரயில் மோதி 80 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த மாவடிக்கால் ரயில்வே பீடர் ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மனைவி முனி ஆச்சு(80). இவர் அந்த பகுதியில் ரயில்வே தண்டாவளத்தின் அருகே உள்ள புளியமரத்தில் விழும் புளியம் பழங்களை எடுப்பது வழக்கம்.

இதன்படி நேற்று காலை, முனிஆச்சு புளியம்பழம் சேகரிக்க ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு ரயில் மோதியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடையநல்லூர் ரயில் நிலைய அதிகாரிகள், ஶ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.