×

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 மருத்துவர்கள் பலி!

தென்காசி தென்காசி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில், அரசு மருத்துவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் ராம்குமார். இவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று ராம்குமார் தென்காசியில் நடந்த மருத்துவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்தார். அவருடன் குருவிகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் சிதம்பரராஜா(45) உள்ளிட்ட 3 பேர் உடன் சென்றுள்ளனர். நேற்று
 

தென்காசி

தென்காசி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில், அரசு மருத்துவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் ராம்குமார். இவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று ராம்குமார் தென்காசியில் நடந்த மருத்துவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்தார்.

அவருடன் குருவிகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் சிதம்பரராஜா(45) உள்ளிட்ட 3 பேர் உடன் சென்றுள்ளனர். நேற்று மாலை பாவூர்சத்திரம் அடுத்த திரவிய நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்த சாலையோர மரத்தின் மீது மோதியது. இதில், காரை ஓட்டிச்சென்ற மருத்துவர் ராம்குமார் மற்றும் சிதம்பரராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த மருத்துவர் முத்துகணேஷ் உள்பட 2 பேரை போலீசார் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் விபத்தில் 2 மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.