×

வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை – இருவர் போக்சோ சட்டத்தில் கைது!

சிவகங்கை சிவகங்கையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழக்குளம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. சம்பவத்தன்று பெற்றோர் வெளியே சென்றதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த துரைபாண்டி (44) மற்றும் சின்னபாண்டி(35) ஆகியோர் கேபிள் ஒயர் இழுக்க வந்துள்ளதாக கூறி வீட்டிற்குள் சென்றுள்ளனர். பின்னர், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அவர்கள் சிறுமியிடம் தவறாக
 

சிவகங்கை

சிவகங்கையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழக்குளம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. சம்பவத்தன்று பெற்றோர் வெளியே சென்றதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த துரைபாண்டி (44) மற்றும் சின்னபாண்டி(35) ஆகியோர் கேபிள் ஒயர் இழுக்க வந்துள்ளதாக கூறி வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

பின்னர், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த அவர்கள் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிடவே அவர்கள் இருவரும் தப்பியோடினர். இது குறித்து சிறுமி தெரிவித்த தகவலின் பேரில், அவரது பெற்றோர் பூவந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.