×

காரைக்குடி அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில், கார் ஓட்டுநர் தற்கொலை!

சிவகங்கை காரைக்குடி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் கார் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள வைரவபுரத்தை சேர்ந்தவர் ஆதப்பன் (32). கார் ஓட்டுநர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் உயிரிழந்த நிலையில், ஆதப்பன் தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஆதப்பனுக்கு திருமணம் செய்வதற்காக உறவினர்கள் பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்துள்ளனர். எனினும் திருமணம் முடிவாகவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக ஆதப்பன் மனமுடைந்து காணப்பட்டு
 

சிவகங்கை

காரைக்குடி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் கார் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள வைரவபுரத்தை சேர்ந்தவர் ஆதப்பன் (32). கார் ஓட்டுநர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் உயிரிழந்த நிலையில், ஆதப்பன் தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ஆதப்பனுக்கு திருமணம் செய்வதற்காக உறவினர்கள் பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்துள்ளனர். எனினும் திருமணம் முடிவாகவில்லை.

இதனால் கடந்த சில நாட்களாக ஆதப்பன் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தின் வீடடில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துனையில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி ஆதப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து அழகப்பபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.