×

திருமணமான 40 நாளில் மனைவியை கழுத்தறுத்து கொன்று, கணவர் தற்கொலை!

சேலம் சேலம் அருகே திருமணமாகி 40 நாட்களில், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோராத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த மோனிஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதியினர் இருவரும் வீராணம் கிராமத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் தங்கராஜ் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம்
 

சேலம்

சேலம் அருகே திருமணமாகி 40 நாட்களில், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோராத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த மோனிஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதியினர் இருவரும் வீராணம் கிராமத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் தங்கராஜ் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது, மோனிஷா கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்தார். அருகிலேயே தங்கராஜ் தூக்கில் சடலமாக தொங்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.