×

பிரசவம் முடிந்து வீடுதிரும்பிய இளம்பெண், 3 மாத குழந்தையுடன் தற்கொலை

சேலம் ஆத்தூர் அருகே பிரசவத்திற்கு சென்று திரும்பிய இளம்பெண், 3 மாத கைக்குழந்தையுடன், வீட்டில் தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் சார்வாய்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவருக்கு தவமணி (27) என்ற மனைவியும், யாஷிகா என்ற 3 மாத குழந்தையும் உள்ளனர். தவமணி பிரசவத்திற்காக காட்டுகோட்டையில் உள்ள தனது அக்கா ஜீவாவின் வீட்டிற்கு சென்றுவிட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு தவமணியின் அக்கா
 

சேலம்

ஆத்தூர் அருகே பிரசவத்திற்கு சென்று திரும்பிய இளம்பெண், 3 மாத கைக்குழந்தையுடன், வீட்டில் தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் சார்வாய்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவருக்கு தவமணி (27) என்ற மனைவியும், யாஷிகா என்ற 3 மாத குழந்தையும் உள்ளனர். தவமணி பிரசவத்திற்காக காட்டுகோட்டையில்

உள்ள தனது அக்கா ஜீவாவின் வீட்டிற்கு சென்றுவிட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு தவமணியின் அக்கா ஜீவாவை தொடர்புகொண்ட உறவினர்கள், தவமணி மற்றும் அவரது குழந்தை தூக்கில் தொங்கி கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவா, கணவர் தனசேகருடன் சார்வாய்புதூர் சென்று இருவரது சடலத்தையும் மீட்பதற்காக வீட்டின் கதவை உடைக்க முயன்றுள்ளார்.

இதற்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை பொருட்படுத்தாமல் கதவை உடைத்து தாய் மற்றும் சேயின் உடலை தனசேகர் மீட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த தலைவாசல் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தனது மகள் மற்றும் பேரக்குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டிய தவமணியின் பெற்றோர், மணிகண்டனை

கைதுசெய்து விசாரிக்க கோரி தலைவாசல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மணிகண்டன் மற்றும் கிராமத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, திருமணம் நடைபெற்று 5 ஆண்டுகளே ஆவதால், இந்த வழக்கு குறித்து ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.