×

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் மீது வழக்கு

சேலம் சேலத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பசுபதி(25). இவர், சிலநாட்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியான இளம்பெண்ணை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவர்களின் விசாரணையில் அவருக்கு 15 வயதே ஆகியது தெரியவ்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
 

சேலம்

சேலத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பசுபதி(25). இவர், சிலநாட்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியான இளம்பெண்ணை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவர்களின் விசாரணையில் அவருக்கு 15 வயதே ஆகியது தெரியவ்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே, அதே நாளில் சிறுமிக்கு சுக பிரசவத்தில் அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

புகாரின் பேரில் சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர், அதில், அந்த பெண் ஈரோட்டை சேர்ந்தவர் என்பதும், கூலி வேலைக்கு சென்ற பசுபதியுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் தனிமையில் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனை அறிந்து சிறுமியின் பெற்றோர் கண்டித்ததால், கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் இருந்து சிறுமியை கடத்திச்சென்ற பசுபதி, அவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, பசுபதி மீது குழந்தை திருமணம், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே சிறுமியை அருகாமையில் இருந்து கவனித்து வரும் பசுபதியை சிகிச்சைக்கு பின் கைதுசெய்யலாம் என போலீசார் காத்துள்ளனர்.