×

ஓமலூர் அருகே அம்பேத்கர் சிலை அவமதிப்பு- தொழிலாளி கைது!

சேலம் ஓமலூர் அருகே அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த சிலைக்கு மர்மநபர்கள் சிலர் காலணி மாலையாக அணிவித்து, அவமதிப்பு செய்தனர். இந்த சம்பவத்தால் வெள்ளாளப்பட்டி பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்த கருப்பூர் காவல் நிலைவிய போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்
 

சேலம்

ஓமலூர் அருகே அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த சிலைக்கு மர்மநபர்கள் சிலர் காலணி மாலையாக அணிவித்து, அவமதிப்பு செய்தனர். இந்த சம்பவத்தால் வெள்ளாளப்பட்டி பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த கருப்பூர் காவல் நிலைவிய போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜு என்பவர், சிலையை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து, ராஜுவை கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.