×

குடும்ப செலவுக்கு பணம் தராத கணவர்… வறுமையில் வாடிய தாய் – மகள் தற்கொலை!

சேலம் சேலத்தில் குடும்ப தகராறில் தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (45). லாரி ஓட்டுநர். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சியை சேர்ந்த சத்யா (40) என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமான சத்யாவிற்கு, 16 வயதில் விஜயலட்சுமி என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பின் ராஜ்குமார், இருவருடன் சேலத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில்
 

சேலம்

சேலத்தில் குடும்ப தகராறில் தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (45). லாரி ஓட்டுநர். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சியை சேர்ந்த சத்யா (40) என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமான சத்யாவிற்கு, 16 வயதில் விஜயலட்சுமி என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பின் ராஜ்குமார், இருவருடன் சேலத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் ராஜ்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குணமடைந்த பின்னர் கடந்த 10 நாட்களாக பெங்களூருவில் சென்று லாரி ஓட்டி வந்துள்ளார். எனினும் அவர் சத்யாவிற்கு குடும்ப செலவிற்கு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் ராஜ்குமார் செல்போனை அணைத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், செவ்வாய் கிழமை காலை நீண்ட நேரமாக சத்யா வீட்டின் கதவு திறக்காமல் இருந்துள்ளது. இதனால் அக்கம் சென்று பார்த்தபோது தாய் – மகள் இருவரும் தூக்கில் சடலமாக தொங்கினர். தகவலின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.