×

சாலையை கடந்த பெண்கள் மீது பைக் மோதி விபத்து: மாமனார் வீட்டுக்கு சென்றவர் பலி

சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு மாமனார் வீட்டுக்கு வரும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பலியானார். சேலம் மாவட்டம் சிவதாபுரம் முத்து நாயக்கர் காலனியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). கூலி தொழிலாளி. இவரின் மாமனார் வீடு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த காட்டுப்பாளையம், பகவதி நகரில் உள்ளது. சேலத்திலிருந்து மாமனார் வீட்டுக்கு வருவதற்காக சம்பவத்தன்று இரவு வெங்கடாசலம் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சின்னியம்பாளையத்தில் உள்ள ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே
 

சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு மாமனார் வீட்டுக்கு வரும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி பலியானார்.

சேலம் மாவட்டம் சிவதாபுரம் முத்து நாயக்கர் காலனியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). கூலி தொழிலாளி. இவரின் மாமனார் வீடு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த காட்டுப்பாளையம், பகவதி நகரில் உள்ளது.

சேலத்திலிருந்து மாமனார் வீட்டுக்கு வருவதற்காக சம்பவத்தன்று இரவு வெங்கடாசலம் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சின்னியம்பாளையத்தில் உள்ள ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அந்த சாலையை கடக்க முயன்ற இரண்டு பெண்கள் மீது வெங்கடசலம் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அந்த இரண்டு பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது . ஆனால் வெங்கடாசலத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் வெங்கடாசலத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வெங்கடசலம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.