×

சேலத்தில் அழகுசாதன பொருள் கடை உரிமையாளரை கட்டிப்போட்டு, ரூ.50 லட்சம் கொள்ளை!

சேலம் சேலத்தில் அழகுசாதன பொருட்கள் கடை உரிமையாளரை கட்டிப்போட்டு விட்டு, ஊழியரே ரூ.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மோகன்குமார். இவர் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் தங்கி, அழகுசாதன பொருட்கள் மொத்த விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். அவரது கடையில் ராஜஸ்தானை சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, மோகன்குமார் கொரோனா பொது முடக்கம் காரணமாக அழகுசாதன பொருட்கள் ஆர்டர்களுக்கான முன்பணம்
 

சேலம்

சேலத்தில் அழகுசாதன பொருட்கள் கடை உரிமையாளரை கட்டிப்போட்டு விட்டு, ஊழியரே ரூ.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மோகன்குமார். இவர் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் தங்கி, அழகுசாதன பொருட்கள் மொத்த விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். அவரது கடையில் ராஜஸ்தானை சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

இதனிடையே, மோகன்குமார் கொரோனா பொது முடக்கம் காரணமாக அழகுசாதன பொருட்கள் ஆர்டர்களுக்கான முன்பணம் 40 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல் வீட்டிலேயே வைத்திருந்து உள்ளார். இதனை அறிந்த ஊழியர் ஓம்பிராகஷ், தனது கூட்டளிகள் இருவருடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு உள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த மோகன்குமாரின் கை, கால்களை கட்டிப்போட்டு, அவர்கள் வீட்டில் இருந்த ரூ.40 லட்சம் பணத்தையும், கடையில் வைத்திருந்த ரூ.10 லட்சம் பணத்தையும், திருடிக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து மோகன்குமார் அளித்த புகாரின் பேரில், செவ்வாய்பேட்டை போலீசார் சமபவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கொள்ளை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிகவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.