×

சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை

சேலம் சேலத்தில் சலூன் கடை தொழிலாளி மனைவி மற்றும் 2 மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் வாய்க்கால் பட்டறை வால்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் சேலம் கோட்டை பகுதியில் உள்ள சலூன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், வசந்தகுமார், கார்த்திக் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இதனிடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முருகனின் மூத்த மகன் மதன்குமார் என்பவர் புற்றுநோயால் உயிரிழந்ததாக
 

சேலம்

சேலத்தில் சலூன் கடை தொழிலாளி மனைவி மற்றும் 2 மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் வாய்க்கால் பட்டறை வால்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் சேலம் கோட்டை பகுதியில் உள்ள சலூன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், வசந்தகுமார், கார்த்திக் ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

இதனிடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முருகனின் மூத்த மகன் மதன்குமார் என்பவர் புற்றுநோயால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மன வருத்தத்தில் இருந்து வந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு முருகன், தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வீடு நீண்டநேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பத்தினர், வீட்டில் எட்டிப்பார்த்து உள்ளனர். அப்போது, முருகன் உள்பட 4 பேரும் வீட்டில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அம்மாபேட்டை காவல்நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது