×

புதுக்கோட்டை- வீட்டில் தூக்கில் தொங்கிய 15 வயது சிறுமி – போலீஸ் விசாரணை

புதுக்கோட்டை ஆலங்குடி அருகே 15 வயது சிறுமி மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கும்மங்குளம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் அபிநயா. நேற்றுகாலை வழக்கம்போல் கட்டுமான பணிக்கு செல்லும் தனது தந்தைக்கும், அத்தை, பட்டி ஆகியோருக்கும் உணவு சமைத்து கொடுத்து வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், வேலைக்கு சென்ற பாட்டி மாரிக்கண்ணு இரவு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அபிநயா தூக்கில் சடலமாக
 

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே 15 வயது சிறுமி மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கும்மங்குளம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் அபிநயா.

நேற்றுகாலை வழக்கம்போல் கட்டுமான பணிக்கு செல்லும் தனது தந்தைக்கும், அத்தை, பட்டி ஆகியோருக்கும் உணவு சமைத்து கொடுத்து வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், வேலைக்கு சென்ற பாட்டி மாரிக்கண்ணு இரவு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அபிநயா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி முத்துராஜா தலைமையிலான போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுமி மரணம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.