×

புதுக்கோட்டை: பைக்கில் சென்றவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கும்பல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மீமிசல் அருகே பாப்பானேந்தல் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மரித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பெத்தையன்வயல் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா என்பவரது மகன் சி.எஸ்.ஆர். குமார். இவர் தனது சொந்த வேலை காரணமாக பொன்பேத்தி சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். பாப்பானேந்தல் கிராமத்தின் அருகே குமார் வந்த இரு சக்கர வாகனத்தை மறித்து அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி
 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மீமிசல் அருகே பாப்பானேந்தல் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மரித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பெத்தையன்வயல் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா என்பவரது மகன் சி.எஸ்.ஆர். குமார். இவர் தனது சொந்த வேலை காரணமாக பொன்பேத்தி சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். பாப்பானேந்தல் கிராமத்தின் அருகே குமார் வந்த இரு சக்கர வாகனத்தை மறித்து அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக வெட்டப்பட்ட குமாரை மீட்டு மணமேல்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறுஏதும் காரணமா என்று பல கோணங்களில் கோட்டைப்பட்டினம் காவல்துறைதுணை கண்காணிப்பாளர் சிவராமன் மற்றும் மீமிசல் உதவி ஆய்வாளர் துரைசிங்கம் தலைமையிலான காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்கவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.