×

நகராட்சி பெண் ஆடிட்டர் வீட்டில், 91 சவரன் நகைகள் கொள்ளை!

புதுக்கோட்டை புதுக்கோட்டை நகராட்சி பெண் ஆடிட்டர் வீட்டில் 91 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பூரணவள்ளி, புதுக்கோட்டை நகராட்சியில ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில், தம்பதியினர் இருவரும் கடந்த ஒரு மாத காலமாக, நமணசமுத்திரம் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் தங்கி இருந்தனர். தொடர்ந்து, நேற்று காலை திருவப்பூர் வீட்டிற்கு திரும்பினர்.
 

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி பெண் ஆடிட்டர் வீட்டில் 91 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பூரணவள்ளி, புதுக்கோட்டை நகராட்சியில ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில், தம்பதியினர் இருவரும் கடந்த ஒரு மாத காலமாக, நமணசமுத்திரம் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் தங்கி இருந்தனர்.

தொடர்ந்து, நேற்று காலை திருவப்பூர் வீட்டிற்கு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அறையில் இருந்த பீரோவை உடைத்து 91 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, ராமமூர்த்தி அளித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கொள்ளை சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.