×

பேருந்து பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது

சென்னை பூந்தமல்லி அருகே பேருந்து பயணிகளை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஒருவனை பொதுமக்கள் பிடித்து போலீசில்ஒப்படைத்தனர். சென்னை பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகளிடம் அடிக்கடி செல்போன்கள் திருடப்பட்டு வந்தன.இந்நிலையில் இன்று பேருந்தில் ஏறும் பயணிகளிடம் கையில் பேப்பர் மற்றும் டவலுடன் வந்த இளைஞர்கள் சிலர் செல்போனை திருட முயன்றனர். அப்போதுதனது செல்போனை திருடுவதை அறிந்த பயணி ஒருவர், திருடனை மடக்கிப்பிடித்தார். இதனால் அவன் செல்போனை வீசிவிட்டு தப்பியோடிய நிலையில்
 

சென்னை

பூந்தமல்லி அருகே பேருந்து பயணிகளை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஒருவனை பொதுமக்கள் பிடித்து போலீசில்ஒப்படைத்தனர். சென்னை பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகளிடம் அடிக்கடி செல்போன்கள் திருடப்பட்டு வந்தன.இந்நிலையில் இன்று பேருந்தில் ஏறும் பயணிகளிடம் கையில் பேப்பர் மற்றும் டவலுடன் வந்த இளைஞர்கள் சிலர் செல்போனை திருட முயன்றனர். அப்போதுதனது செல்போனை திருடுவதை அறிந்த பயணி ஒருவர், திருடனை மடக்கிப்பிடித்தார்.

இதனால் அவன் செல்போனை வீசிவிட்டு தப்பியோடிய நிலையில் அவனது கூட்டாளிகளும் தப்பியோட முயற்சித்தனர். அப்போது அவர்களை விரட்டிச் சென்ற பொதுமக்கள் ஒருவனை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்துபோலீசில் ஒப்படைத்தனர் விசாரணையில் அந்த நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், 5 பேர் கும்பல் பயணிகளிடம் செல்போனை பறித்துச் சென்றதும்தெரியவந்தது. இதனையடுத்து அவனை கைதுசெய்த போலீசார், அவனிடமிருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.