×

நீலகிரியில் காட்டுயானை தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு

நீலகிரி நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கியதில், தந்தை – மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். கூடலூர் சேரங்கோடு அடுத்த கொளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனநதராஜ். இவர் திமுக ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினராக உள்ளார். இவரது மகன் பிரசாந்த். தந்தை, மகன் இருவரும் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அப்போது காட்டுயானை தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் அந்த பகுதிக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி
 

நீலகிரி

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கியதில், தந்தை – மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். கூடலூர் சேரங்கோடு அடுத்த கொளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனநதராஜ். இவர் திமுக ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினராக உள்ளார். இவரது மகன் பிரசாந்த். தந்தை, மகன் இருவரும் தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது காட்டுயானை தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் அந்த பகுதிக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஒருவாரத்தில் மட்டும் 4 பேர் காட்டுயானை தாக்கி உயிரிழந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.