சிறுத்தை தாக்கியதில் மற்றொரு சிறுத்தை உயிரிழப்பு
ஊட்டி நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே இரு சிறுத்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், காயமடைந்த சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. மஞ்சூர் அடுத்த மெரிலான் பகுதியில் வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடப்பதை கண்டு, கைக்காட்டி வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மருத்துவர்கள், உயிரிழந்த சிறுத்தைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். இதில், இரு சிறுத்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அந்த
Oct 29, 2020, 15:54 IST
ஊட்டி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே இரு சிறுத்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், காயமடைந்த சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. மஞ்சூர் அடுத்த மெரிலான் பகுதியில் வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று
உயிரிழந்து கிடப்பதை கண்டு, கைக்காட்டி வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மருத்துவர்கள், உயிரிழந்த சிறுத்தைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். இதில், இரு சிறுத்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அந்த சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.