×

மளிகைக் கடை உரிமையாளர் கல்லால் தாக்கி படுகொலை!

நீலகிரி குன்னூர் அருகே தொழில்போட்டி காரணமாக மளிகைக்கடை உரிமையாளரை கல்லால் தாக்கி கொன்ற நபரை போலீசார் கைதுசெய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மூலக்கடையை சேர்ந்தவர் நடராஜ் (68). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இதேபோல், அதே பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பவரும், தனது வீட்டில் மளிகைக்கடை நடத்தி வந்தார். வியாபாரம் பாதிக்கப்பட்டதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
 

நீலகிரி

குன்னூர் அருகே தொழில்போட்டி காரணமாக மளிகைக்கடை உரிமையாளரை கல்லால் தாக்கி கொன்ற நபரை போலீசார் கைதுசெய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மூலக்கடையை சேர்ந்தவர் நடராஜ் (68). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இதேபோல், அதே பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பவரும், தனது வீட்டில் மளிகைக்கடை நடத்தி வந்தார். வியாபாரம் பாதிக்கப்பட்டதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று நடராஜ் – முத்துகுமார் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது, வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த முத்துக்குமார் கருங்கல்லினால் நடராஜை தாக்கினார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு குன்னூர் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு நடராஜை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மேல குன்னூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலம், இந்த கொலை சம்பவம் குறித்து நடராஜ் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து, கொலையாளி முத்துக்குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.