×

பராமரிப்பதில் தகராறு… 95 வயது மூதாட்டியை பாட்டிலால் குத்திக்கொன்ற மகன்…

நாமக்கல் திருச்செங்கோடு அருகே 95 வயது மூதாட்டியை பாட்டிலால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள சூரியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்மாள் (95). இவருக்கு தங்கவேல், சீனிவாசன் உள்ளிட்ட 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணம் செய்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். இதன் காரணமாக தனியே வசித்து வந்த பொன்னம்மாள், வயது முதிர்வால் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். இதனால், அவரை மூத்த மகன் தங்கவேல்
 

நாமக்கல்

திருச்செங்கோடு அருகே 95 வயது மூதாட்டியை பாட்டிலால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள சூரியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்மாள் (95). இவருக்கு தங்கவேல், சீனிவாசன் உள்ளிட்ட 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணம் செய்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர்.

இதன் காரணமாக தனியே வசித்து வந்த பொன்னம்மாள், வயது முதிர்வால் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். இதனால், அவரை மூத்த மகன் தங்கவேல் குடும்பத்தினர் கவனித்து வந்துள்ளனர். மேலும், பொன்னம்மாளை பராமரிப்பது தொடர்பாக தங்கவேல் மற்றும் அவரது 2 சகோதரர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த மூதாட்டி பொன்னம்மாளை பாட்டிலால் குத்திக் கொலை செய்தார். அப்போது, தங்கவேலின் மகன் குணசேகரன் வரவே, அங்கிருந்து சீனிவாசன் தப்பியோடினார். மூதாட்டி கொலை செய்யப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த குணசேகரன், இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதனை அடுத்து, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தங்கவேல் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கொலையாளி சீனிவாசனை கைது செய்தனர்.