பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கணக்கில்வராத ரூ.55,920 பறிமுதல்
நாமக்கல் பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 56 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத 54 ஆயிரத்து 920 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, நகராட்சி ஆணையர் இளவரசன், பொறியாளர் சரவணன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார்
Oct 30, 2020, 16:22 IST
நாமக்கல்
பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 56 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது கணக்கில் வராத 54 ஆயிரத்து 920 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, நகராட்சி ஆணையர் இளவரசன், பொறியாளர் சரவணன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.