ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.56 ஆயிரம் பணம் பறிமுதல்
நாகை நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில்வராத 56 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீபாவளிக்காக பல்வேறு நபர்களிடம் இருந்து லஞ்சப்பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி மனோகரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்,அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலக கழிவறை மற்றும் மேஜை லாக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
Nov 11, 2020, 11:43 IST
நாகை
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில்வராத 56 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீபாவளிக்காக பல்வேறு நபர்களிடம் இருந்து லஞ்சப்பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி மனோகரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்,
அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலக கழிவறை மற்றும் மேஜை லாக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத 56 ஆயிரம்
ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி மற்றும் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.