×

3 வயசு குழந்தை அடித்துக்கொலை! கள்ளக்காதலனுடன் லாட்ஜில் இருந்து எஸ்கேப் ஆன கொடூரத்தாய்!

ஒரு ஆணும், பெண்ணும் பதற்றத்துடன் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு மூன்று வயது பெண்குழந்தையை, உடல்நிலை சரியில்லை என்று கூறி, எடுத்துச்சென்றனர். அக்குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அக்குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்ததும், அதிர்ச்சியில் உறைந்த இருவரும், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். மருத்துவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும், சிசிடிவி வீடியோ ஆதாரம் மூலம் தப்பியோடிய அந்த இருவர் குறித்தும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, வேளாங்கன்னி சர்ச் அருகே அந்த இருவரும் நிற்பதாக தகவல் கிடைக்க, போலீசார்
 

ஒரு ஆணும், பெண்ணும் பதற்றத்துடன் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு மூன்று வயது பெண்குழந்தையை, உடல்நிலை சரியில்லை என்று கூறி, எடுத்துச்சென்றனர். அக்குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அக்குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்ததும், அதிர்ச்சியில் உறைந்த இருவரும், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.

மருத்துவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும், சிசிடிவி வீடியோ ஆதாரம் மூலம் தப்பியோடிய அந்த இருவர் குறித்தும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, வேளாங்கன்னி சர்ச் அருகே அந்த இருவரும் நிற்பதாக தகவல் கிடைக்க, போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிளியூரைச்சேர்ந்த மகேந்திரன் மனைவி எழிலரசி(வயது28). கடந்த சில ஆண்டுகள்கு முன்பு மகேந்திரன் இறந்துவிட்டார். 5 வயது மகன் மற்றும் 3 வயது மகள் மனுஸ்ரீ உடன் வாழ்ந்து வந்தார் எழிலரசி.

இந்நிலையில் எழிலரசிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசமர தெருவைச்சேர்ந்த அறுவடை இயந்திர டிரைவரான ராமதாஸ்(வயது30)க்கும் தொலைபேசி மூலமாக பழக்கம் உண்டாகி, அது கள்ளக்காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் உல்லாசமாக இருக்க, வேளாங்கன்னி லாட்ஜ் ஒன்றில் கடந்த 10ம் தேதி அறை எடுத்து தங்கினர். கூடவே, மூன்று வயது மகளையும் அழைத்து வந்திருந்தார் எழிலரசி.

எழிலரசியுடன் உல்லாசமாக இருந்தபோது, குழந்தை இடையூறு செய்ததால், அக்குழந்தையை அடித்து, எட்டி உதைத்திருக்கிறார் ராமதாஸ். இதில் அக்குழந்தை மயங்கி விழுந்துவிட்டது. இதனால், குழந்தை இறந்தது தெரியாமல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை இறந்தது தெரியவந்ததும், உடலைக்கூட வாங்காமல், திரும்பவும் வேளாங்கன்னி வந்து லாட்ஜ் அறையை காலி செய்துவிட்டு, எங்காவது எஸ்கேப் ஆகிவிடலாம் என்று நின்றுகொண்டிருந்தபோதுதான் போலீசில் சிக்கினர் என்ற விபரம் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இறந்து போன குழந்தையைப்பார்த்து அழாமல், குழந்தையின் உடலைக்கூட மருத்துவமனையில் இருந்து வாங்காமல், கள்ளக்காதலனுடன் எஸ்கேப் ஆகப்பார்த்த ஈவு இரக்கமற்ற தாயின் செயல், நாகை மாவட்ட பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.