×

நாகை அருகே நிலத் தகராறில் விவசாயி அடித்துக்கொலை!

நாகை நாகை அருகே நிலத் தகராறில் விவசாயியை அடித்துக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள இடையாத்தாங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் புருஷோத்தமன் (57). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர்கள் இருவரும் கிராமத்தில் உள்ள கோவில் நிலத்தை அனுபவித்து வந்து உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஜெயக்குமார் வீட்டின் அருகில் உள்ள, தனது நிலத்தில் இருந்த கருவேல மரங்களை புரஷோத்தமன் வெட்டியுள்ளார். அப்போது, அதற்கு எதிர்ப்பு
 

நாகை

நாகை அருகே நிலத் தகராறில் விவசாயியை அடித்துக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள இடையாத்தாங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் புருஷோத்தமன் (57). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர்கள் இருவரும் கிராமத்தில் உள்ள கோவில் நிலத்தை அனுபவித்து வந்து உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஜெயக்குமார் வீட்டின் அருகில் உள்ள, தனது நிலத்தில் இருந்த கருவேல மரங்களை புரஷோத்தமன் வெட்டியுள்ளார்.

அப்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயக்குமார், புருஷோத்தமனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், கீழே கிடந்த மரக் கட்டையினால் புருஷோத்தமனை சரமாரியாக தாக்கினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலின் பேரில் திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.