×

விழுந்தமாவடியில் படகு அணையும் தளம் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் விழுந்தமாவடி, காமேஷ்வரம் மற்றும் புஷ்பவனம் ஆகிய பகுதிகளில் இயற்கை சீற்றங்களின்போது படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்கமீன்பிடி படகு அணையும் தளம் அமைக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். மூன்று கிராமங்களிலும் படகு அணையும் தளம் அமையும் பகுதியில் நேற்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஆட்சியர் பிரவீன் நாயர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். மேலும், இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதியை தமிழக அரசு
 

நாகை மாவட்டம் விழுந்தமாவடி, காமேஷ்வரம் மற்றும் புஷ்பவனம் ஆகிய பகுதிகளில் இயற்கை சீற்றங்களின்போது படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க
மீன்பிடி படகு அணையும் தளம் அமைக்கப்படும் என அமைச்சர்

ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். மூன்று கிராமங்களிலும் படகு அணையும் தளம் அமையும் பகுதியில் நேற்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஆட்சியர் பிரவீன் நாயர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். மேலும், இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதியை தமிழக

அரசு விரைவில் வழங்கும் என்றும் அவர் கூறினார். விழுந்தமாவடி, காமேஸ்வரம் மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையான படகு அணையும் தளம் கட்ட அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.