×

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை -போக்சோ சட்டத்தில் 3பேர் கைது!

நாகை, மாவட்டம், வேதாரண்யம் அருகே 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வரும் தாய்க்குத் துணையாக, அவர் வேலைக்கு செல்லாத நாட்களில் அவரது 16 வயது மகள் சென்று வந்துள்ளார். அப்போது, அந்த உணவகத்தின் உரிமையாளர் சண்முகசுந்தரம் ஆசை வார்த்தைகள் கூறி, அவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரது நண்பர்கள் விஜயன்,
 

நாகை, மாவட்டம், வேதாரண்யம் அருகே 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வரும் தாய்க்குத் துணையாக, அவர் வேலைக்கு செல்லாத நாட்களில் அவரது 16 வயது மகள் சென்று வந்துள்ளார்.

அப்போது, அந்த உணவகத்தின் உரிமையாளர் சண்முகசுந்தரம் ஆசை வார்த்தைகள் கூறி, அவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரது நண்பர்கள் விஜயன், அரவிந்தன் ஆகியோரும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அரவிந்தன் மனைவி துர்கா தேவி உடந்தையாக இருந்துள்ளார்.

இது குறித்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், சண்முகசுந்தரம், விஜயன், அரவிந்தன் அவர் மனைவி துர்கா தேவி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்த வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், 3 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சண்முகசுந்தரத்தை தேடி வருகின்றனர்.