×

மகன்கள் குடித்துவிட்டு தகராறு செய்ததால் தாய் தற்கொலை... சேலம் அருகே சோகம்!

 

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் மகன்கள் மதுபோதையில் தகராறு செய்ததால் வேதனையில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி தெய்வானை(55). இவர்களுக்கு நல்லதம்பி, செந்தில்  என 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நல குறைவால் கருப்பண்ணன் இறந்துவிட்டார். இதனால் தெய்வானை தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நல்லதம்பி, செந்தில் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தெய்வானை மனவேதனையில் இருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், தெய்வானை அவர்களை சமாதானப்படுத்தி உள்ளார். அப்போது, இருவரும் தெய்வானையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தெய்வானை அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் கெங்கவல்லி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.