×

பெண்களை கட்டிப்போட்டு, 27 சவரன் நகை, ரூ.85 ஆயிரம் பணம் கொள்ளை

மதுரை மதுரையில் அதிகாலையில் வீட்டில் இருந்த பெண்களை கட்டிப்போட்டு விட்டு, நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவரது மகள் கமலா. நேற்று இரவு இருவரும் வீட்டில் படுத்து உறங்கி உள்ளனர். இந்த நிலையில் அதிகாலையில் திடீரென வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கும்பல், தாய் – மகள் இருவரையும் கத்திமுனையில் சேலையால் கட்டிபோட்டு உள்ளனர். தொடர்ந்து, பீரோவில் இருந்த 27 சவரன்
 

மதுரை

மதுரையில் அதிகாலையில் வீட்டில் இருந்த பெண்களை கட்டிப்போட்டு விட்டு, நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவரது மகள் கமலா. நேற்று இரவு இருவரும் வீட்டில் படுத்து உறங்கி உள்ளனர். இந்த நிலையில் அதிகாலையில் திடீரென வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கும்பல், தாய் – மகள் இருவரையும் கத்திமுனையில் சேலையால் கட்டிபோட்டு உள்ளனர்.

தொடர்ந்து, பீரோவில் இருந்த 27 சவரன் தங்க நகைகள் மற்றும் 85 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிகொண்டு அங்கிருந்து தப்பியோடினர். இன்று காலையில் வீட்டிற்கு சென்ற உறவினர்கள் சரோஜா மற்றும் கமலாவை மீட்டனர். பின்னர், இந்த கொள்ளை சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.