×

பழம் வாங்குவதுபோல கள்ளநோட்டை மாற்றிய நபர் – மூதாட்டி கண்ணீர்

மதுரையில் மூதாட்டியிடம் 500 ரூபாய் கள்ளநோட்டை கொடுத்து ஏமாற்றிச் சென்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை பைபாஸ் சாலை அருகே மூதாட்டி ஆரோக்கியம்மாள் பழங்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து, 200 ரூபாய்க்கு பழங்களை வாங்கிவிட்டு மீதம் 300 ரூபாயை பெற்று சென்றுள்ளார். பின்பு அந்த மூதாட்டி நோட்டில் சந்தேகம் அடைந்த காரணத்தினால் அக்கம்பக்கத்தினரிடம் காட்டி விசாரித்துள்ளார். அதனை கண்டு அதிர்ந்துபோன பொதுமக்கள் இது கள்ளநோட்டு
 

மதுரையில் மூதாட்டியிடம் 500 ரூபாய் கள்ளநோட்டை கொடுத்து ஏமாற்றிச் சென்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை பைபாஸ் சாலை அருகே மூதாட்டி ஆரோக்கியம்மாள் பழங்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.

அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து, 200 ரூபாய்க்கு பழங்களை வாங்கிவிட்டு மீதம் 300 ரூபாயை பெற்று சென்றுள்ளார்.

பின்பு அந்த மூதாட்டி நோட்டில் சந்தேகம் அடைந்த காரணத்தினால் அக்கம்பக்கத்தினரிடம் காட்டி விசாரித்துள்ளார்.

அதனை கண்டு அதிர்ந்துபோன பொதுமக்கள் இது கள்ளநோட்டு என்று தெரியவந்தது. இதனால் மனமுடைந்து மூதாட்டி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனைகண்டு அங்கிருந்தவர்கள் சோகமடைந்தனர்.