×

அரசுவேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி- பெண் உள்பட இருவரிடம் விசாரணை

மதுரை மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் பெண் உள்ளிட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கே.புதூர் காந்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்க முயற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது அவரிடம் அறிமுகமான புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சித்ரா ஆகியோர், அரசுப்பணி வாங்கி தருவதாக கூறி ஆசை வார்த்தை தெரிவித்து உள்ளனர். இதனை நம்பி, மாரிமுத்து
 

மதுரை

மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் பெண் உள்ளிட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கே.புதூர் காந்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்க முயற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது அவரிடம் அறிமுகமான புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சித்ரா ஆகியோர், அரசுப்பணி வாங்கி தருவதாக கூறி ஆசை வார்த்தை தெரிவித்து உள்ளனர்.

இதனை நம்பி, மாரிமுத்து கடந்த 2019ஆம் ஆண்டு 4 லட்சம் ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்து உள்ளார். இந்த நிலையில் உறுதி அளித்தபடி அவர்கள் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்களிடம் கொடுத்த பணத்தை கேட்டபோது கொடுக்காமல் காலம் தாழ்த்து வந்துள்ளனர். மேலும், மாரிமுத்துவுக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதனை அடுத்து, மாரிமுத்து கே.புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.