×

இருசக்கர வாகனம் மீது கார் மோதல் – ஓய்வுபெற்ற ஆசிரியர், மனைவி பலி!

மதுரை மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்த நாச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (60). ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர். இவரது மனைவி தாயம்மாள்(56). இவர்கள் நேற்று கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரம் பகுதியில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தனர். பின்னர், இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். வஞ்சிநகரம் அருகே சாலையை கடந்து எதிர் திசைக்கு
 

மதுரை

மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்த நாச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (60). ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர். இவரது மனைவி தாயம்மாள்(56). இவர்கள் நேற்று கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரம் பகுதியில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தனர்.

பின்னர், இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். வஞ்சிநகரம் அருகே சாலையை கடந்து எதிர் திசைக்கு செல்ல முயன்றபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, பாலசுப்ரமணிம் வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொட்டாம்பட்டி போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.