×

மதுரை- டாஸ்மாக் ஊழியரை தாக்கி மதுபாட்டில்கள் கொள்ளை

மதுரை மதுரை அலங்காநல்லூர் அருகே டாஸ்மாக் ஊழியரின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு, மதுபாட்டில்கள் கொள்யைடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலங்காநல்லூரை அடுத்துள்ள கொண்டையம்பட்டியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு, புதுப்பட்டியை சேர்ந்த பிரதீப் மற்றும் மணீஸ் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது பணியிலிருந்த டாஸ்மாக் ஊழியர் சண்முகவேலிடம் இலவசமாக மது வழங்க கோரி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுபாட்டில் வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் பீர்பாட்டிலால் சண்வேலின் தலையில் தாக்கிவிட்டு, அங்கிருந்த 30 மதுபாட்டில்களை திருடிச்சென்றனர்.
 

மதுரை

மதுரை அலங்காநல்லூர் அருகே டாஸ்மாக் ஊழியரின் தலையில் பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு, மதுபாட்டில்கள் கொள்யைடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலங்காநல்லூரை அடுத்துள்ள கொண்டையம்பட்டியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு, புதுப்பட்டியை சேர்ந்த பிரதீப் மற்றும்

மணீஸ் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது பணியிலிருந்த டாஸ்மாக் ஊழியர் சண்முகவேலிடம் இலவசமாக மது வழங்க கோரி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுபாட்டில் வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் பீர்பாட்டிலால் சண்வேலின் தலையில் தாக்கிவிட்டு, அங்கிருந்த 30

மதுபாட்டில்களை திருடிச்சென்றனர். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் இருவரையும் விரட்டியடித்துள்ளனர். இந்நிலையில் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீசார் தலையில்

படுகாயமடைந்த சண்முகவேலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக பிரதீப் மற்றும் முனீஸ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.