×

திருமங்கலத்தில் யோகா ஆசிரியை கொன்று புதைத்த, வழக்கறிஞர் தற்கொலை!

மதுரை திருமங்கலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் யோகா ஆசிரியை கொன்று புதைத்த, வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன்(42). மனைவியை பிரிந்து, தனது 10 வயது மகளுடன் வசித்து வந்தார். இதனிடையே, பசும்பொன் நகரில் உள்ள யோகா ஆசிரியை சித்ராதேவி என்பவரிடம், தனது மகளை யோகா வகுப்புக்கு அனுப்பி உள்ளார். அப்போது, கணவரை பிரிந்து வாழ்ந்த வந்த சித்ராதேவியுடன், ஹரிகிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக் காதலாக
 

மதுரை

திருமங்கலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் யோகா ஆசிரியை கொன்று புதைத்த, வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன்(42). மனைவியை பிரிந்து, தனது 10 வயது மகளுடன் வசித்து வந்தார். இதனிடையே, பசும்பொன் நகரில் உள்ள யோகா ஆசிரியை சித்ராதேவி என்பவரிடம், தனது மகளை யோகா வகுப்புக்கு அனுப்பி உள்ளார். அப்போது, கணவரை பிரிந்து வாழ்ந்த வந்த சித்ராதேவியுடன், ஹரிகிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் 1ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சித்ராதேவி திடீரென மாயமாகினார். இதனால் ஹரிகிருஷ்ணன் மீது சந்தேகம் கொண்ட சித்ராதேவியின் பெற்றோர், இதுதொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். மேலும், மகளை கண்டுபிடித்து தர கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று ஹரிகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இறப்பதற்கு முன்பாக அவர் எழுதிய 10 பக்க கடிதத்தை போலீசாரிடம் சிக்கியது.

அதில், சித்ராதேவியை கொலை செய்து, தனது வீட்டின் கழிவறையில் புதைத்து உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து, போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் புதைக்கப்பட்ட சித்ராதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.