×

இரட்டைக்கொலை – பிரபல ரவுடியின் சகோதரர் உட்பட 2 பேர் கைது

மதுரையில் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தின் தம்பி செந்தில் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். மதுரை மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணராஜ் மற்றும் ஊராட்சி பணியாளர் முனியசாமி ஆகியோர் கடந்த 12ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக முன்னாள் ஊராட்சி தலைவர் திருப்பதி மற்றும் ஊராட்சி செயலாளர் வீரணன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், திடீர்
 

மதுரையில் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தின் தம்பி செந்தில் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

மதுரை மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணராஜ் மற்றும் ஊராட்சி பணியாளர் முனியசாமி ஆகியோர் கடந்த 12ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக முன்னாள் ஊராட்சி தலைவர் திருப்பதி மற்றும் ஊராட்சி செயலாளர் வீரணன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், திடீர் திருப்பமாக பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தின் தம்பி செந்தில் மற்றும் அவரது கூட்டாளி பாலகுரு ஆகியோர் தேர்தல் முன்விரோதம் மற்றும் தகாத உறவால் ஏற்பட்ட பகையின் காரணமாக, கிருஷ்ணராஜை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து செந்தில் மற்றும் பாலகுருவை கைதுசெய்து போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.