×

பைனான்சியர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

மதுரை திண்டுக்கல் மாவட்டத்தில் பைனான்சியர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் ராதாராஜ் நகரை சேர்ந்தவர் பைனான்சியர் சரவணகுமார் (35). இவர் கடந்த 19ஆம் தேதி நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பியபோது, இருட்டில் மறைந்திருந்த மர்மகும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த சரவணகுமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை
 

மதுரை

திண்டுக்கல் மாவட்டத்தில் பைனான்சியர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் ராதாராஜ் நகரை சேர்ந்தவர் பைனான்சியர் சரவணகுமார் (35). இவர் கடந்த 19ஆம் தேதி நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பியபோது, இருட்டில் மறைந்திருந்த மர்மகும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த சரவணகுமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ரெங்கசமுத்திரபட்டியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.,