×

மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளி கைது; நகை, பணம் பறிமுதல்

மதுரையில் நகைக்காக மூதாட்டி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு குற்றவாளியை போலீசார் கைதுசெய்தனர். மதுரை பழங்காநத்தம் நேரு நகர் பாலாஜி தெருவை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் கடந்த ஜூலை மாதம் வீட்டில் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார், அங்கிருந்த
 

மதுரையில் நகைக்காக மூதாட்டி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு குற்றவாளியை போலீசார் கைதுசெய்தனர். மதுரை பழங்காநத்தம் நேரு நகர் பாலாஜி தெருவை சேர்ந்தவர் பஞ்சவர்ணம்.

இவர் கடந்த ஜூலை மாதம் வீட்டில் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி பழனிகுமார் என்பவர் ஒரு மணி நேரத்தில் 2 முறை உடை மாற்றுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. சந்தேகத்தின் பேரில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர், பஞ்சவர்ணத்திடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், மேலும் 10 ஆயிரம் பணம் கேட்டு சென்றபோது மூதாட்டி தர மறுத்ததால் ஆத்திரத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, நகை மற்றும் பணத்தை திருடி வந்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து, பழனிகுமாரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 46 கிராம் தங்க நகை மற்றும் பணம் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.