×

மதுரையில் கஞ்சா விற்ற 6 பேர் கைது- 40 கிலோ கஞ்சா பறிமுதல்!

மதுரை மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மதுரை பைக்காரா பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சுப்ரமணியபுரம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் சிவபிரகாசம் தலைமையிலான போலீசார் பைக்காரா பாகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் இருசக்கர வாகனங்களில் நின்றிருந்த 6 இளைஞர்களை பிடித்து
 

மதுரை

மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

மதுரை பைக்காரா பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சுப்ரமணியபுரம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் சிவபிரகாசம் தலைமையிலான போலீசார் பைக்காரா பாகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் இருசக்கர வாகனங்களில் நின்றிருந்த 6 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களது வாகனங்களை சோதனையிட்டனர். அப்போது, வாகனத்தில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்கள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சா மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த கோபி, கப்பலூரை சேர்ந்த லட்சுமணன், திருநகரை சேர்ந்த திருமலை, சித்திரவேல், தீபக், சூர்யா (25) ஆகியோர் என்பதும், அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து, 6 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். மேலும், இதுதொடர்பாக சிவகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.