மதுரை: டிப்ஸ் பிரிப்பதில் தகராறு – தனியார் விடுதி ஊழியர் மீது வழக்கு
மதுரை தனியார் விடுதியில் டிப்ஸ் பணத்தை பிரித்துக்கொள்வதில் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுரை திடீர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு பிரபல தனியார் விடுதியில், சரவணன் மற்றும் காளிமுத்து ஆகியோர் பணிபுரிந்து வருகின்றர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வழங்கிய டிப்ஸ் பணத்தை பிரித்து கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், காளிமுத்து, சரவணன் என்பவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் அளித்த
Nov 7, 2020, 19:55 IST
மதுரை தனியார் விடுதியில் டிப்ஸ் பணத்தை பிரித்துக்கொள்வதில் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை திடீர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு பிரபல தனியார் விடுதியில், சரவணன் மற்றும் காளிமுத்து ஆகியோர் பணிபுரிந்து வருகின்றர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வழங்கிய டிப்ஸ் பணத்தை பிரித்து கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், காளிமுத்து, சரவணன் என்பவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில், காளிமுத்து மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.