மதுரை: சமூக சேவகர்களுக்கு விருது வழங்கிய நடிகர் பயில்வான் ரங்கநாதன்
மதுரை புதூர் அருகே தனியார் அரங்கில் பாரதி யுவகேந்திரா சார்பாக சிறப்பாக சேவை புரிந்த சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் பயில்வான் ரங்கநாதன் கலந்துகொண்டு, 50-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச அரிசி மற்றும் பேரிடர் காலங்களில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு சேவா ரத்னா விருதை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன், கஷ்டபடுபவர்கள், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கஷ்ட காலத்தில் உதவி செய்பவர்கள் தான் கடவுள் என்றார். இந்நிகழ்ச்சியில் அண்ணாநகர் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையாளர் லில்லி கிரேஸ், ராமகிருஷ்ணா ரமண ஆஸ்ரம் சுவாமி ஸ்ரீ சுப்ரமண்ய ஆனந்தா, பாரதி யுவகேந்திரா நிறுவனர்
நெல்லை பாலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.