×

மதுரை அருகே பாம்பு கடித்து, 10 வயது சிறுவன் பலி!

மதுரை மதுரை அருகே தோட்டத்தில் விஷப்பாம்பு தீண்டியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த பணமூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாண்டீஸ்வரன். இவரது மகன் ஆண்டிச்சாமி(10). இவர் அரசுப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை வீட்டின் அருகில் இருந்த மல்லிகை தோட்டத்திற்கு சிறுவன் ஆண்டிச்சாமி, தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது, செடியில் மறைந்திருந்த விஷப்பாம்பு ஒன்று சிறுவனை00000 கடித்தது. இதனால் அவன் தோட்டத்திலேயே மயங்கி விழுந்தான்.
 

மதுரை

மதுரை அருகே தோட்டத்தில் விஷப்பாம்பு தீண்டியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த பணமூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாண்டீஸ்வரன். இவரது மகன் ஆண்டிச்சாமி(10). இவர் அரசுப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை வீட்டின் அருகில் இருந்த மல்லிகை தோட்டத்திற்கு சிறுவன் ஆண்டிச்சாமி, தண்ணீர் பாய்ச்ச சென்றார்.

அப்போது, செடியில் மறைந்திருந்த விஷப்பாம்பு ஒன்று சிறுவனை00000 கடித்தது. இதனால் அவன் தோட்டத்திலேயே மயங்கி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், சிறுவனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.