×

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- இளைஞர் உட்பட இருவர் பலி

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த குருகப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி இளங்கோவன்(25). இவர் வேலை காரணமாக இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரை நோக்கி சென்றுள்ளார். ஊத்தரங்கரை அடுத்த சாலமரத்துப்பட்டி கூட்டுரோடு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த கெரிகெப்பள்ளியை சேர்ந்த செல்வம்(40) என்பவரது இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில்
 

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த குருகப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி இளங்கோவன்(25). இவர் வேலை காரணமாக இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரை நோக்கி சென்றுள்ளார். ஊத்தரங்கரை அடுத்த சாலமரத்துப்பட்டி கூட்டுரோடு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த கெரிகெப்பள்ளியை சேர்ந்த செல்வம்(40) என்பவரது இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் இருவர் பலியான சம்பவத்தால் ஊத்தங்கரையில் பரபரப்பு ஏற்பட்டது.